Type Here to Get Search Results !

கடத்தூர் கிளை நூலகத்தில் பொது நூலக தின விழா.

மத்திய அரசின் ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை, ராஜா ராம்மோகன் ராய் பிறந்த நாளான மே 22 பொது நூலக தினமாக   அறிவித்துள்ளது. 

நேற்று ராஜா ராம்மோகன் ராய் பிறந்த 250ஆம் ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.  நேற்று 22.5.202 ஞாயிற்றுக்கிழமை கடத்தூர் கிளை நூலகத்தில் நடைபெற்ற பொது நூலக தின விழாவில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு நூலகர் தீ. சண்முகம் தலைமை வகித்தார். "பொது நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவதில் நூலகர்களின் பங்கு" என்ற தலைப்பில் நூலகர் சி. சரவணன் கருத்துரை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் நூலகர்கள்    பத்மாவதி, தங்கம்மாள், சிவகாமி,  கலைச்செல்வி, திருஞானம், ஜெயவேல்,  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் எம். ஜாகிர் உசேன் வரவேற்புரை வழங்கினார். முடிவில் நூலகர் சம்பத் நன்றி கூறினார். விழாவில் திரளாக நூலகர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies