Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் பலி.

மாதிரி படம்.
தர்மபுரி மாவட்டம் ஏமகுட்டியூர் கிராமத்தை சேர்ந்த காவேரி மகன் கண்ணன் (வயது.36), இவர் விருத்தாசலத்தில் உள்ள  ஜியோ கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார், இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் ஊருக்கு வந்த இவர் பாலக்கோட்டில் உள்ள நண்பரை காண நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்றார், நண்பரை சந்தித்து விட்டு இரவு வீடு திரும்பும்போது பாலக்கோட்டிலிருந்து தர்மபுரி நோக்கி வந்து கொன்டிருந்தார்,  கடமடை இரயில்வே கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்த இவரது மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த  பணை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார்.

தகவலறிந்த பாலக்கோடு போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies