Type Here to Get Search Results !

பென்னாகரத்தில் கம்யூனிஸ்ட் தலைவர் தா பாண்டியன் 91வது பிறந்த நாள் நிகழ்ச்சி, மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினருமான மறைந்த தோழர் தா பாண்டியன்  அவர்களின்   91வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பென்னாகரம் நகர,வட்டார குழு சார்பில்  பழைய பேருந்து நிலையம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தோழர். தா. பாண்டியன் அவர்களின் திருவுருவ படத்திற்கு பென்னாகரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர். ந. நஞ்சப்பன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சிக்கு வட்டார செயலாளர் முனியப்பன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் எஸ். தேவராசன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள்   எஸ் கலைச்செல்வன், சி மாதையன்,  ஒன்றிய துணை செயலாளர் சம்பத்,  நகர துணை செயலாளர் தர்மராஜா  மாவட்டக்குழு உறுப்பினர்கள் கதிரவன், கிருஷ்ணன்,  முத்து, கவுன்சிலர் நாகராஜ், சண்முகம், மற்றும் முருகன் சேட்டு நாகப்பன்   உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை  செலுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies