Type Here to Get Search Results !

தீடீரென உயர்ந்த நீர்வரத்து, வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக உள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழையின் காரணமாக திடீரென நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளதால் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர்வரத்து அருவிகளை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்.

கர்நாடகா மற்றும் தமிழக எல்லைக்கு உட்பட்ட காவிரிக் கரையோரங்களில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முன்தினம் திடீரென விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. அதனை தொடர்ந்து நேற்று  நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக வந்தது. 

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கும் குளிப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் திடீரென ஒகேனக்கல் காவிரி ஆற்றின் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வில் நீரின் வரத்து அதிகரித்து வினாடிக்கு 45ஆயிரம்  கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் வரத்தால் ஐந்தருவி மெயின் அருவி சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் மூழ்கடித்த படி ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆறு, அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கவோ ஆற்றை கடக்கவோ, பரிசல் இயக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்ட தடை உத்தரவு மூன்றாவது நாளாக தொடர்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies