Type Here to Get Search Results !

தருமபுரி ரயில் நிலையம் வந்தடைந்தது பெங்களூரு - தருமபுரி மின்சார ரயில்.

1906ஆம் ஆண்டு கட்டப்பட்ட தருமபுரி ரயில் நிலையத்தின் வழியாக தினந்தோறும் சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது, இங்கிருந்து தென் தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரம் மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் தருமபுரி ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன, தருமபுரி மாவட்டத்தில் இருந்து பெங்களூரு, ஓசூர் போன்ற ஊர்களுக்கு  தினந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகளும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர், 

ஓமலூர் முதல் பெங்களூரு மின்சார பாதை திட்டம் கடந்த 2017-18 ஆண்டில் தொடங்கப்பட்டது, கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூரு - ஓமலூர் இடையேயை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது, இதில் முதற்கட்டமாக பெங்களுரூ - ஓசூர் இடையே மின் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்து,  தொடர்ச்சியாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பெங்களூரு - ஓசூருக்கு இடையே மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இரண்டாம் கட்டமாக மின் வழித்தடம் அமைக்கும் பணி தருமபுரி வரை நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டமும் நிகழ்த்தப்பட்டது,  ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதின் விளைவாக தருமபுரி வரை மின்சார ரயில் சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

பெங்களூரு - ஓசூர் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்(06577) சேவை ஏப்ரல் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தருமபுரி ரயில் நிலையம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது, அதன்படி, காலை 7.30 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில், ஓசூர், வழியாக இன்று காலை 10.45 மணிக்கு தருமபுரி ரயில் நிலையம்  சேர்ந்தது.

இந்த ரயில் மறுமார்க்கத்தில், மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.20 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையம் சென்றடையும்,  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies