Type Here to Get Search Results !

நல்லப்பநாயக்கனஹள்ளி அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டச்சியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நல்லப்பநாயக்கனஅள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபெரியாண்டிச்சி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைப்பெற்றது.

இந்த விழா கடந்த 4ம் தேதி கணபதி பூஜையுடன்தொடங்கியது.  இன்று அதிகாலை  கலச ஆராதனை, இரண்டாம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, நாடி சந்தானம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், பூர்ணாஹநிதி நடந்தது. 

இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை அய்யர்கள் மற்றும் 63 வீட்டு பங்காளிகள், ஊர் கவுண்டர்கள்  தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயிலில் படுத்த நிலையில் உள்ள ஸ்ரீபெரியாண்டிச்சி  அம்மனுக்கு தலை முதல் பாதம்  வரை புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். பின்னர்  புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து    ஸ்ரீபெரியாண்டிச்சி அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள். மற்றும்  பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது, அம்மன் சிறப்புஅலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி  காலை முதல்  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை 63 வீட்டு குலதெய்வ பங்காளிகள் , ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies