Type Here to Get Search Results !

தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வென்றவர்கள் ஆட்சியரிடம் பாராட்டுகளை பெற்றனர்.

ஹரியானா மாநிலம் மற்றும் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முதியோர்கள் மற்றும் இளையோர்கள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்றமைக்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்களை இன்று நேரில் சந்தித்து, பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

ஹரியானா மாநிலம் மற்றும் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தேசிய மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முதியோர்கள் மற்றும் இளையோர்கள் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் பெற்றமைக்காக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்களை கடந்த (25.04.20222) நேரில் சந்தித்து, பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

ஹரியானா மாநிலத்தில் கடந்த 24.03.2022 முதல் 30.03.2022 வரை நடைபெற்ற தேசிய அளவிலான அரசு பணியாளர்களுக்கான இறகு பந்து போட்டியில் தருமபுரி மாவட்டத்தின் சார்பில் திரு. கே.சரவணன், திரு.ஜி.சிவப்பிரகாசம், திரு.என். இராதா கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றமைக்காகவும் மற்றும் ஹரியானா மாநிலத்தில் கடந்த 28.03.2022 முதல் 30.03.2022 வரை நடைபெற்ற தேசிய அளவிலான அரசு பணியாளர்களுக்கான கபடி போட்டியில் திருஜி ஜவஹர், திரு.டி.பழனி ஆகியோர் பங்கேற்றமைக்காகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 24.02.2022 முதல் 28.02.2022 வரை நடைபெற்ற தேசிய அளவிலான 66-வது இளையோர் தேசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் திரு.எம் லோகேஷ் அவர்கள் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றமைக்காகவும், மதுரை மாவட்டத்தில் கடந்த 07.04.2022 முதல் 09.04.2022 வரை நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் தடகள் போட்டியில் தருமபுரி மாவட்டத்திலிருந்து திருமதி .மகாலட்சுமி அவர்கள் பங்கேற்று 65 வயது பிரிவில் 80 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கம், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றமைக்காகவும், திருமதி. தங்கம்மாள் அவர்கள் பங்கேற்று 70 வயது பிரிவில் தட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றமைக்காகவும், திரு.பரமசிவம் அவர்கள் பங்கேற்று 75 வயது பிரிவில் குண்டு எறிதல் போட்டி, ஈட்டி எறிதல் போட்டி மற்றும் தட்டு எறிதல் போட்டி ஆகிய போட்டிகளில் வெண்கலப் பதக்கம் பெற்றமைக்காகவும், திரு.கங்காதரன் அவர்கள் மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்று 400 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் பெற்றமைக்காகவும் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. சதிவ்யதர்சினி., இஆப., அவர்களை இன்று நேரில் சந்தித்து, பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி. தே.சாந்தி அவர்கள் உடனிருந்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884