Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாப்பாரப்பட்டியில் திருச்சி தோட்டக்கலை மாணவிகள் நடத்திய கண்காட்சி.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவியர்கள் மதுமிதா, நர்மதா, மௌனிகா, காவியா, கீர்த்தனா, கௌசல்யா ஆகியோர் ஊரக  தோட்டக்கலை பணி அனுபவத்திற்காக இரண்டு மாதம் பயிற்சி பெற வந்துள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கண்காட்சி நடத்தினர்.இக்கண்காட்சியில்,அடர் தீவனம் முறை, பசுந்தீவனம்,குழித்தட்டு நாற்றாங்கால், மஞ்சள் வண்ண ஒட்டும் பொறி,சாமை (தர அடிப்படையில்),தாது உப்பு கலவை ஆகியவற்றை காட்சிப்படுத்தினர்.இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட விவசாயிகள்  கேட்ட சந்தேகங்களுக்கு  தோட்டக்கலை மாணவிகள் விரிவாக  விளக்கம் அளித்தனர், இப்பயிற்சியில்,30 க்கும்   மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884