Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அரூரில் நகைக்கடை ஷெட்டரை உடைத்து 2.5கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை.

தருமபுரி மாவட்டம் அரூர் நிலையம் அருகேயுள்ள கடைவீதி பஜாரில் 3 நகைக்கடைகளில் திருடர்கள் கொள்ளை முயற்சி - ஒரு நகை கடையின் பூட்டை உடைத்து சுமார் இரண்டரை கிலோ வெள்ளி நகைகள் மட்டும் கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள்.

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கடைவீதி பஜாரில் நகைக்கடை, ஜவுளிக்கடை, தனியார் தங்க நகை கடன் வங்கிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் தொடர் 3 நகைக் கடைகளின் சட்டரில் போடப்பட்ட பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த மாறுவேடத்தில் வந்த முகமூடி கொள்ளையர்கள், ஞானவேல் என்பவருக்கு சொந்தமான ஒரு நகைக் கடையில் மட்டும் சட்டரின் பூட்டை உடைத்து அதில் இருந்த சுமார் ரூ. 2 இலட்சம் மதிப்பிலான இரண்டரை கிலோ வெள்ளி நகைகளை மட்டும் கொள்ளையடித்தனர். 

மேலும் லாக்கரை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாததால் வெள்ளி நகைகளை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால் மீதமுள்ள இரண்டு கடைகளில் இருந்த சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிபோகமல் காப்பாற்றப்படன. 

தகவலறிந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை சோதனை செய்தபோது இளைஞர் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து, தலையில் மங்கி குல்லா, கையில் கிளவுஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கொள்ளை அடிக்க முயற்சித்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தால் கடைவீதி பஜாரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies