இந்த முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ.1,00,000/- ரொக்கம் பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும், அதன்படி 2022ம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது.
இவ்விருது தொடர்பான கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
- 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள்/பெண்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2022 அன்று 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் அல்லது 31.03.2022 அன்று 35 வயதிற்குள்ளாக இருத்தல் வேண்டும்.
- கடந்த நிதியாண்டில் (2021-2022) அதாவது 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.
- விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்படவேண்டும்)
- விண்ணப்பதாரார்கள் சமுதாய நலனுக்காக தொண்டாற்றியிருப்பவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
- மத்திய / மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழங்கள் / கல்லூரிகள் / பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
விண்ணப்பதாரருக்கு உள்ளூர் சமுதாய மக்களிடம் செல்வாக்கு பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும். மேற்காணும் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுபெற 15 முதல் 35 வயதிற்குட்பட்ட தகுதிவாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசிநாள் மற்றும் நேரம்: 10.05.2022 மாலை 4.00 மணி. எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.