தற்போது தருமபுரி மாவட்ட வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் (TNPSC Gr-II/ II(A) 2022) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் தகுந்த பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடைபெற உள்ளது.
மேலும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித்தேர்விற்கு தேவையான சமச்சீர்கல்வி பாடப்புத்தகம் மற்றும் புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி வகுப்பில் இலவசமாக பாடக்குறிப்புகள் வழங்கப்படும், மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும்.
நடத்தப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தினை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்.04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC Gr-II/II(A) 2022) 5413 காலிப்பணியிடங்கள் வெளியிட்டுள்ளதால் போட்டித்தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.