Type Here to Get Search Results !

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயனடைய அழைப்பு.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ளவர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இரண்டாம் பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டிற்குள் இருக்க வேண்டும். 

மேலும் தாய்க்கு வயது 40-க்குள் நிரந்தர கருத்தடை செய்து இருக்க வேண்டும், அதற்கான சான்று இணைத்து பயனடைய விண்ணப்பம் இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்

(பொது பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

1. தாயாரின் மாற்றுச்சான்று

2. தந்தையின் மாற்றுச்சான்று

3. திருமண பத்திரிக்கை

4. முதல் குழந்தை பிறந்த சான்று

5. 2-ஆம் குழந்தை பிறந்த சான்று

6. வருமான சான்று 72000/-க்குள் இருக்க வேண்டும் (தாசில்தாரிடம் )

7. இருப்பிடச் சான்று (தாசில்தாரிடம் )

8. ஜாதிச்சான்று (தாசில்தாரிடம் )

9. தாயாரின் கருத்தடை செய்த சான்று (40 வயதுக்குள் இருக்க வேண்டும்)

10. ரோட்டரி வழக்கறிஞரிடம் 2 பெண் குழந்தைக்கு பின் ஆண் குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என்று உறுதிமொழிச் பத்திரம்.

11. குடும்ப அட்டை போட்டோ

12. ஆண் வாரிசு இல்லாத சான்று (தாசில்தாரிடம் )

13. குடும்ப அட்டை

மேற்கண்ட விபரங்கள் பெற சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர் மற்றும் மகளிர் ஊர்நல அலுவலரை நேரில் அணுகி விண்ணப்பங்கள் இளையதளதம் மூலம் விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விபரங்கள் பெற மாவட்ட சமூகநல அலுவலர், தருமபுரி மாவட்டம் அலுவலக தொலைபேசி எண். 04342 - 233088. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884