Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்வு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு வருகின்ற 02.03.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டும் மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வருகின்ற 04.03.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு வருகின்ற 03.02.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டும் மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் வருகின்ற 04.03.2022 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையில் கடந்த 28.02.2022 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தலைமையேற்று பேசும்போது தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைத்தின் உத்தரவின்படி, தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி வருகின்ற 02.03.2022 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைகளை முழுமையாக பின்பற்றி வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியை உரிய விதிகளின்படி, சிறப்பாக நடத்திட வேண்டும். 

அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் மன்றக்கூட்டரங்கில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தி அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்திட வேண்டும். தருமபுரி நகராட்சியின் தலைவர் பதவிக்கு பெண்கள் (பொது) (Women-General) எனவும், பேரூராட்சிகளில் அரூர் பேரூராட்சி மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி ஆகிய 2 பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு பெண்கள் (பொது) (Women-General) எனவும், பி.மல்லாபுரம் பேரூராட்சி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி மற்றும் கடத்தூர் பேரூராட்சி ஆகிய 3 பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு எஸ்.சி (பொது) (SC-General) எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளவாறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி இம்மறைமுக தேர்தல்களை விதிமுறைகளுக்குட்பட்டு சிறப்பாக நடத்திட வேண்டும். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்ட வட்டார பார்வையாளர்கள் (Block Observers) மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் (Monitoring Officers) ஆகியோரும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றி இம்மறைமுக தேர்தல் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன் இஆப., கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பி. அண்ணாமலை, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு முத்தையன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல் ) திரு. எம்.மாரிமுத்து ராஜ், இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை மரு.இளங்கோவன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) திருமதி.சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெயக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் திரு.சரவணன், உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், மலைவாழ் மேம்பாட்டு திட்டம் திட்ட அலுவலர் திரு.கதிர்சங்கர், தருமபுரி நகராட்சி பொறியாளர் திரு.ஜெயசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல்) திரு. ரவிச்சந்திரன், தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வட்டார பார்வையாளர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884