தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனையர் ரேணுகா, கி.ஊ. மகாலிங்கம் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் மணியம்பாடி, மோட்டாங்குறிச்சி, புட்டிரெட்டிபட்டி, சிந்தல்பாடி, தளநத்தம், தென்கரைக்கோட்டை, உள்ளிட்ட 25 ஊராட்சி செயலர்களுக்கு ஊராட்சியில் உள்ள குடிநீர் ஆதாரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், சுகாதார வளாகம், சமுதாயக்கூடம், சேவை மைய கட்டிடம், குளம் குட்டை தடுப்பணை உள்ளிட்டவைகளை ஊராட்சிகளில் சொத்து ஆகியவற்றை TNSDEMDATA COLLACTION APP புதிய செயலிவழியாக ஆய்வு செய்து அனுப்ப வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தராமன் (தணிக்கை), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கி.ஊ ஜோதிலிங்கம். பொது நிர்வாகம் கோவிந்தன் உள்ளிட்ட அலுவலர்கள் ஊராட்சி செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
.gif)
