பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க உரை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 2 பிப்ரவரி, 2022

பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் விளக்க உரை.

தர்மபுரி மாவட்ட பாஜக சார்பில் தர்மபுரி ருக்மணி  மகாலில், மத்திய பட்ஜெட் 2022 தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நேற்று பாரத பிரதமர் மோடி அவர்கள் நேரலை மூலம் விளக்க உரை ஆற்றினார். 

பாஜக மாநில துணைத் தலைவர் நரேந்திரன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது தர்மபுரி மாவட்ட பாஜக தலைவராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A.பாஸ்கர்  அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் வரதராஜ், பொது செயலாளர்கள் வெங்கட்ராஜ், கலைச்செல்வன், தொழில் பிரிவு தலைவர் ஐஸ்வர்யம் முருகன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் புவனேஸ்வர், IT பிரிவு மாவட்ட தலைவர் மோகன் ஹரிஷ் சிங், நகர தலைவர் ஜிம் சக்திவேல், மாவட்ட துணை தலைவர்கள் கணேசன், சிவன், ரமேஷ் வர்மா மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad