பென்னாகரம் பேரூராட்சியில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாத்தியங்களுடன் நடந்தே சென்று பிரச்சாரம்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன இந்த வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் வாத்தியங்களோடு பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் முள்ளுவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனை சாலை ஆகிய இடங்களில் வேட்பாளர்களுடன் நடந்தே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது கட்சி தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டனர்
.gif)
