Type Here to Get Search Results !

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

பென்னாகரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தல் பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட  ஆட்சியர் .ச.திவ்யதர்சினி  இன்று காலை முதல் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் – 2022 முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் மொத்தம்  20க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்  இன்று காலை 7.00 மணி முதல் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி,  இன்று காலை முதல்  பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட முள்ளுவாடி,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பென்னாகரம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies