Type Here to Get Search Results !

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பிவிட்டு சாவியை இயந்திரத்திலேயே விட்டு சென்ற ஊழியர்கள்.

போச்சம்பள்ளி ஸ்டேட் பேங்க் வங்கி ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் பணம் நிரப்பிவிட்டு சாவியை விட்டுச் இயந்திரத்திலேயே விட்டு சென்ற ஊழியர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் செயல்பாட்டில் இருந்த வங்கியில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தில் வங்கி ஊழியர்கள் பணத்தை நிரப்பியுள்ளனர். பணத்தை நிரப்பிய வங்கி ஊழியர்கள் அசாதாரணமாக ஏடிஎம் இயந்திரத்தின் சாவியை ஏடிஎம் இயந்திரத்திலேயே விட்டுவிடுட சென்றுள்ளனர். 

இன்று காலை பணத்தை எடுப்பதற்காக பொது மக்கள் வந்து பார்த்தபோது இயந்திரத்தில் இருக்கின்ற சாவியை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போச்சம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த போச்சம்பள்ளி போலீசார் இயந்திரத்தில் இருந்த சாவியை பத்திரமாக மீட்டு அங்கு வந்த வங்கி ஊழியர் தில்சத்பேகத்தடம் சாவியை ஒப்படைத்தனர். சாவியை பயன்படுத்தி  இரவில் பணம் ஏதாவது எடுக்கப்பட்டதா?  என்பதை வங்கி ஊழியர்கள் சோதனையிட்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884