இரண்டு நாள் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மண்னூர், சித்தேரி,அழகூர், நலமங்கடை, மாம்பாறை,நொச்சிக்குட்டை, கலசபாடி உள்ளிட்ட மலைகிராமத்தில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டன. அதில் முதலாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்ற நலமங்காடு அணிக்கு முதல் பரிசாக ரூ. 5000, இரண்டாம் இடத்தைப் பிடித்த சித்தேரி அணியினருக்கு ரூ. 3000, மூன்றாவது இடத்தைப் பிடித்த மன்னூர் டீமுக்கு ரூ.2000 என பரிசு தொகை வழங்கி விளையாட்டு வீரர்களை விழாக்குழுவினர் ஊக்கப்படுத்தினர்.
இதுகுறித்து வெற்றி பெற்ற இளைஞர்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறோம். பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசு பெற்றுள்ளோம். தமிழக அரசு மலைவாழ் இன மாணவர்கள் வளர்ச்சி பெற சித்தேரியில் கிரிக்கெட் கிரவுண்ட் ஒன்று அமைத்து கொடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக