மூன்றடுக்கு ஊராட்சிகள் எந்தவொரு நிதியிலிருந்தும் உயர்கோபுர மின்விளக்குகள், சிறுமின் கோபுர விளக்குகள், ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெருவிளக்குகள் அமைத்திட தடைசெய்யப்படுகிறது.
சோலார் உயர்மின்கோபுர விளக்குகள் அமைப்பது முழுவதும் மறு உத்தரவு வரும்வரை தடை செய்யப்படுகிறது. சோலார் எல்.இ.டி விளக்குகள், கம்பங்களுடன் கொள்முதல் செய்தல் உடனடியாக தடை செய்யப்படுகிறது.
இதனடிப்படையில் மேற்காணும் அறிவுரைகளை மீறி கொள்முதல் செய்யும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மீது விதிமுறைகளின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், மீறி கொள்முதல் செய்யப்படும் / நிறுவப்படும் சோலார் எல்.இ.டி விளக்குகள், உயர்கோபுர மின்விளக்குகள், சிறுமின் கோபுர விளக்குகள், சோலார் எல் இ.டி. விளக்குகள் ஆகியவற்றிற்கு செலவிடப்படும் தொகையை தொடர்புடைய அலுவலர்களிடம் இருந்து பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மேற்குறிப்பிடப்பட்ட அறிவுரைகளை அனைத்து ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.
.gif)
