Type Here to Get Search Results !

முழு ஊரடங்கு; தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தீவிர சோதனை.

பர்கூரில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கையொட்டி, பிரதான சாலைகள் முழுவதும் காவல் துறையினர் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர சோதனை.

கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் அமல்படுத்தியுள்ளது. இதில் பால், மருந்தகம், மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மற்ற அனைத்து கடைகளும் மூட உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்  முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

கிராம புறங்களில் இருந்து பர்கூர்  நகருக்குள் நுழைய முடியாத அளவிற்கு பிரதான சாலைகள் முழுவதும் தடுப்பு வேலிகள் அமைத்து காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திவீர வாகன சோதனை செய்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதித்து வருகின்றனர். இதனால் கிராம புறங்களில் இருந்து வருபவர்கள்  பர்கூர்  நகருக்குள் நுழையாமல் திரும்பி செல்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies