Type Here to Get Search Results !

வார சந்தை வளாகத்தில் கழிப்பிட வசதியை ஏற்படுத்த விசிக கோரிக்கை.

அரூரை அடுத்த எச்.ஈச்சம்பாடி வாரச்சந்தை வளாகத்தில் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அந்தக் கட்சியின் ஒன்றிய செயலர் எம்.எஸ்.மூவேந்தன் தமிழக முதல்வருக்கு  அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்: தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், எச்.ஈச்சம்பாடியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் வாரச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு கே.வேட்ரப்பட்டி, எஸ்.பட்டி, வடுகப்பட்டி, கணபதிப்பட்டி, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி, வேப்பநத்தம் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் வந்துச் செல்கின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies