Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் குறித்த பயிற்சி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் மண்டபத்தில் பாலக்கோடு ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளான ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோருக்கான  பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால் தலைமையில் நடைப்பெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் சித்ரா இத்திட்டம் குறித்து  பயிற்சி அளித்தார். இப்பயிற்சியின் நோக்கம் கர்ப்பிணி பெண்களுக்கு போதிய சத்தான உணவு பொருட்களை வழங்குவதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக பிறக்க வழிவகை செய்கிறது,

எனவே கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டசத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரை உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் பிறக்கும் குழந்தைகள்  ஆரோக்கியமானதாகவும்   சரியான எடையுடன் பிறக்க வழிவகை செய்கிறது.

இதற்காக மத்திய மற்றும் மாநில  அரசு போஷன் அபியான் எனும் திட்டத்தின் மூலம் கருவுற்றது முதல் குழந்தை பிறந்து வளரும் வரை ஆயிரம் நாட்கள் தொடர்ந்து திட்டம் கண்காணிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்நி நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மேற்பார்வையாளர்கள் புனிதா, திலகம், கலா, விஜயா, .திட்ட ஒருங்கினைப்பாளர்கள் புவியரசன்,சுகந்தி கண்காணிப்பாளர் சிராஜ் பேகம், மனோன்மணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies