Type Here to Get Search Results !

லாரி மோதி மான் உயிரிழப்பு; வனத்துறை அதிகாரிகள் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த புக்கசாகரம் அருகே டிப்பர் லாரி மோதி புள்ளிமான் உயிரிழப்பு, சூளகிரியை அடுத்த தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள பேரண்டப்பள்ளி சானமாவு வனப்பகுதியில் மான்கள் , குரங்குகள் , யானைகள் உள்ளிட்ட பல்வேறு  வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

உணவுக்காக அவ்வப்போது வன விலங்குகள் கிராமங்களில் உலா வருவது அப்பகுதியில்  வழக்கமான நிகழ்வு, இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த காமன் தொட்டி அருகே புக்கசாகரம் கிராமத்திற்க்கு செல்லும் சாலையில் அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி புள்ளிமான் மீது மோதியது.

டிப்பர் லாரி மோதியதில் புள்ளி மான் சம்பவ இடத்திலேயே இறந்தது தகவலை அறிந்து அப்பகுதி வனசரக அதிகாரிகள் இறந்த புள்ளிமானின் உடலை கைப்பற்றினர். டிப்பர் லாரி மோதி இறந்த புள்ளிமான்   குறித்து வன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies