Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தனியார் நிறுவனம் அமைக்க விவசாயிகள் எதிர்த்து தர்ணா போராட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குருபரப்பள்ளி ஊராட்சியில் தொழில் பூங்கா உள்ளது. இந்த தொழில் பூங்காவில் குருபரப்பள்ளி சுற்றுவட்டார கிராங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர். 

இந்த நிலையில் சுமார் 120 ஏக்கர் நிலத்தை மைலின் என்ற தனியார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க காலையில் பணிகளை தொடங்கியுள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர், இதனால் தொழிற்சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 

தொழிற்சாலை அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிலம் வழங்கியுள்ள நிலையில் 100 விவசாகளின் நிலங்களுக்கு மட்டும் பணம் வழங்கி மீதமுள்ள 60 விவசாயிகளுக்கு நிறுவனம் எவ்வித அனுமதியுள்ளமால் இழப்பீடு வழங்காமல் நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலை அமைப்பதாக இப்பகுதி விவசாயிகள் கூறிவருகின்றனர். 

மேலும் மீதமுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வரை போராட்டம் தொடரவதாக விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குருபரப்பள்ளி போலிசார் விவசாயிகளிடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884