Type Here to Get Search Results !

அரசு மகளிர்க்கலைக்கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயச்சந்திரபானு ரெட்டி அவர்களின் உத்தரவின் படி, சுகாதாரத்துறை துணை இயக்குனர்  கோவிந்தன்  அவர்களின் வழிகாட்டுதலில், இன்று கிருஷ்ணகிரி அரசு சந்தியா மகளிர் கல்லூரியில், கொரானா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி எடுப்பதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கொரோனாவின் உருமாறிய  மறுவடிவம் ஓமிக்ரான் பற்றி விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் கல்லூரிமுதல்வர் டாக்டர்.கண்ணன் தலைமைதாங்கினார்.

கணிதத்துறையின் தலைமை பேராசிரியை திருமதி.உமா, ஆங்கிலத்துறையின் தலைமைப்பேராசிரியை டாக்டர்.கல்பனா, கணினித்துறையின் தலைமைப்பேராசிரியை டாக்டர். லாவண்யா முன்னிலை வகித்தனர், இவ்விழிப்புணர்வுக்கூட்டத்தை மாவட்ட நலக்கல்வியாளர் சப்தமோகன் அவர்கள் நடத்தினார், அரசுக்கல்லூரியின் அனைத்துப்பேராசிரியர்களும் மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பின்பற்றப்படவேண்டிய  கொரோனா தடுப்பு விதிகள், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, கைகழுவுதல், மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதான் அவசியம் மற்றும் கொசுக்களால் பரவும் வியாதிகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. விதிமுறைகள் பின்பற்றப்படாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதிக்கப்படுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது என்பது பற்றியும் விரிவாக மாவட்ட நலக்கல்வியாளர் சப்தமோகன் எடுத்துரைத்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884