Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஒடசல்பட்டி புதூரில் அருணாசலஸ்வர திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம்.

ஒடசல்பட்டி புதூரில்  அருணாசலஸ்வர திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனம் மிக விமர்சையாக நடைபெற்றது, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கடத்தூர் அருகே உள்ள  ஒடசல்பட்டி புதூரில்  ஸ்ரீலஸ்ரீ சத்குரு துக்காராம் சித்தர் ஜீவ சமாதி திருக்கோவில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரருக்கு  மார்கழி மாத திருவாதிரை முன்னிட்டு  சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.
இதில்  பால் தயிர் மஞ்சள் திரு மஞ்சள் இளநீர் தேன் பஞ்சாமிர்தம் பன்னீர் சந்தனம் போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர்  பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனத்தில்  காட்சி அளித்தார் இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு கற்பூர தீபாராதனை, மகா தீபாராதனை  காட்டப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட  பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர், இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884