Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை சுற்றிவளைத்த போலீசார்.

ஒசூர் அருகே, மத்திகிரியில் உள்ள சுடுகாட்டில், சூதாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.  தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் செயல்பட்ட சூதாட்ட இடங்களை போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தனர். 

இதனை தொடர்ந்து, தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில், மிக பெரிய அளவில் இந்த பகுதிகளில் சூதாட்டம் நடப்பது வழக்கம் என்பதால் மாநில எல்லை பகுதிகளில் போலீசார் தீவிரமாக  கண்காணித்து வந்தனர். 

இதை அறிந்த நபர்கள் போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் வகையில் சுடுகாடு போன்ற இடங்களை தேர்வு செய்து சூதாட்டத்தில் ஈடுப்பட்டனர். மத்திகிரி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ராயல் டவுன் என்ற இடத்தில் உள்ள சுடுகாட்டில் சூதாடிகள் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 12 நபர்களை கைது செய்தனர். ஒசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் மத்திகிரியை சேர்ந்த இவர்களிடம் இருந்து ரூபாய் 12,260 ரொக்க பணம் மற்றும் 9 இரண்டு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884