1. தேக்கு மரக்கன்றுகள்: 25000 எண்கள்
2. செம்மரக்கன்றுகள் : 1500 எண்கள்
3. வேம்பு மரக்கன்றுகள்: 5000 எண்கள்
4. பூவரசு மரக்கன்றுகள்: 1150 எண்கள்
5. நெல்லி மரக்கன்றுகள்: 1850 எண்கள்
6. நாவல் மரக்கன்றுகள்: 500 எண்கள்
விவசாயிகளுக்கு நடுவதற்கு வழங்கிட தயார்நிலையில் உள்ளது.
மரக்கன்றுகள் விநியோகம் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளுக்கு மிகாமலும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளுக்கு மிகாமலும் வழங்கப்படும். மரங்கன்றுகளை பாராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 2-ஆம் ஆண்டு முதல் 4-ஆம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7/- வீதம் மூன்று ஆண்டுகளுக்கு ரூ.21/- வழங்கப்படும்.
மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரை பயன்படுத்தி டிசம்பர் மாதத்திற்குள் நடவு செய்திட அரூர் பகுதி விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் விருப்பம் உள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறு குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி வாயிலாக விவசாயிகள் தங்களின் பெயர்,முகவரி,செல்பேசி எண், வங்கிகணக்கு எண்; பதிவு செய்தும், தங்கள் பகுதி கீழ்கண்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டும் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
1. அரூர் - திரு. மு. ரமேஷ் - 7373117307
2. K. வேட்ரப்பட்டி - திரு. ஞா.வினோத்குமார்-9585594002
3. H. கோபிநாதம்பட்டி - திரு. கா.ஜெயக்குமார்-9786195760
4. கோட்டப்பட்டி - திரு. ப.சிவன்-8012126706
5. தீர்த்தமலை -திரு. மா.கிருஷ்ணன்- 6380545955
அரூர் பகுதி விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மரங்கன்றுகளை நட்டு வரும் காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்திர வைப்பு தொகை கிடைப்பதுடன் விவசாய நிலங்களில் மண்வளம் அதிகரிப்பதோடு அல்லாமல் நமது அரூர் பகுதி பசுமைப் பரப்பும் சுற்றுப்புற சூழலும் மேம்படும் என தங்கள் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.