Type Here to Get Search Results !

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற எம்எல்ஏ ஆய்வு.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சின்னார் அணைக்கு நீர் கொண்டு வர பல முறை அரசுக்கு கோரிக்கையாக முன்வைத்தனர் பொதுமக்கள், ஓசூர் கெலவரப்பள்ளியில் திறத்தவிடப்பட்ட உபரிநீரை மருதாண்டப்பள்ளி கால்வாய்  வழியாக சூளகிரி துரை ஏரி, சூளகிரி சின்னார் அணைக்கு நீர் கொண்டுவர தற்போது நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டது.

இதனிடையே மருதாண்டப்பள்ளி கால்வாய் தற்போது துர்வாரப்பட்டு வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அதிமுக  சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி நேரில் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். விரைவில் சின்னார் அணைக்கு நீர் கொண்டுவர அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சூளகிரி அதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட மன்ற தலைவர் சிவராஜ் மற்றும் சூளகிரி விவசாய சங்கத்தினர் மற்றும் சின்னார் ராமசாமி, ஜெகதீசன், நந்தக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884