Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

இனி திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாளில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுத மகளிர் திட்ட களப்பணியாளர்கள் உதவி செய்வார்கள்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (08.11.2021) நடைபெற்றது.

இக்குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, பசுமை வீடு, பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், சாலை வசதி, பேருந்து வசதி, குழந்தைகள் நல மையம், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், புதிய ஆழ்துளைக்கிணறு, தகனமேடை, குடிநீர் வசதி, புதிய மின் இணைப்பு வசதி, பட்டா வேண்டுதல், தரைமட்ட பாலம், முதியோர் ஓய்வூதியத் தொகை, இதர உதவித் தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 198 மனுக்கள் வரப்பெற்றன.

இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் அம்மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு கோரிக்கை மனுக்களை வழங்குவதற்காக வருகை தரும் பொதுமக்களின் சிரமங்களை போக்கிடவும், அவர்களின் கோரிக்கை மனுக்களை இலவசமாக எழுதி கொடுப்பதற்கும், தருமபுரி மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் திட்ட களப்பணியாளர்கள் மூலம் இலவசமாக மனுக்கள் எழுதி கொடுக்கும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக இலவசமாக எழுதிக்கொள்ளலாம். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு. அனிதா, தனித்துணை ஆட்சியர் திருமதி. கே.வி.சாந்தி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884