Type Here to Get Search Results !

நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 2021; வாக்கு எண்ணிக்கை மையங்களை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் - 2021 முன்னேற்பாடு பணிகளின் ஒரு பகுதியாக தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிசதிவ்யதர்சினி இஆப, அவர்கள் இன்று (12.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2021 முன்னேற்பாடு பணிகளின் ஒரு பகுதியாக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவ்வாக்கு எண்ணும் மையங்கள் அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் அமைவிடங்கள் குறித்தும் இக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு துறை கட்டடங்களையும், அதில் உள்ள வசதிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி சதிவ்யதர்சினி இஆப, அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.இராவைத்திநாதன், இஆப, தருமபுரி சார் ஆட்சியர் திருமதி.சித்ரா விஜயன், இஆப, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) திரு.எம்.மாரிமுத்துராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (உள்ளாட்சி தேர்தல்) திரு ஆர்.இரவிசந்திரன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திருமதி. சித்ரா சுகுமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு. குருராஜன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884