Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

இந்த ஆண்டு பாசிப்பயறு விளைபொருளை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தமிழக அரசு பாசிப்பயறு கொள்முதல் விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பாசிப்பயறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த பாசிப்பயறு விளைபொருளை மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. தருமபுரி மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக மெட்ரிக் 340 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பாசிப்பயறு விலை 1 கிலோ ரூ.65/- முதல் ரூ.68/- வரை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ பாசிப்பயறு விலை ரூ.72.75/- என கொள்முதல் செய்யப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டம் தருமபுரி மற்றும் பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செயல்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விவரங்களுடன் தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் பொறுப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.

பாசிப்பயறு கொள்முதல் 12.10.2021 வரையிலான காலம் வரை நடைபெற உள்ளது. பாசிப்பயறு விளைபொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே பாசிப்பயறு சாகுபடி செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884