Type Here to Get Search Results !

கோவில் சிலைகள் கடத்த முயற்சி; கொள்ளையர்களை கைது செய்ய இந்து முன்னணி கோரிக்கை.

28/10/2021அன்று வியாழக்கிழமை இரவு 8.30 மணி அளவில் மாரண்ட அள்ளி பஸ் ஸ்டாண்ட் காவல் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீ மண்டு மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த நவகிரக சிலைகலில் சூரிய பகவான் சிலையை கம்பியால் குத்தி பெயர்த்தெடுத்து கீழே வைக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து யாரோ சிலையை கடத்த முயற்சித்து மக்கள் நடமாட்டம் இருப்பதால் அங்கேயே வைத்திருக்கிறார்கள் என்று நினைத்து பூசாரிக்கு தகவல் கொடுத்தார். 

மேலும் கோயில்  பூசாரி மற்றும் இந்து முன்னணியினரால்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு பாதுகாப்பு தடுப்பு சுவர் கேட் என்று எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு தடுப்பு சுவர் கூட அமைத்து பாதுகாக்க முடியாத இந்த அறநிலைத்துறை எந்த வகையில் கோவில்களை பராமரிக்க போகிறது பாதுகாக்கப் போகிறது ஏன் உள்ளே நுழைந்தது கோவில் சொத்துக்களை அழிக்கவா அல்லது அபகரிக்கவா?

ஓரிரு மாதங்களுக்கு முன் பாதுகாப்பு சுவர் அமைக்க முயற்சித்து அருகே உள்ள கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது  அது இப்படி சிலையை கடத்த தானா அல்லது அறநிலைத்துறை அவர்களுக்கு உடந்தை யா கோவிலை பாதுகாக்க முடியாத கோவில் சொத்துக்களை மீட்க முடியாத அறநிலை துறைக்கு கோவிலில் என்ன வேலை கோவிலை விட்டு வெளியேறலாமே, கோவிலில் உண்டியல் வேண்டும் நகைகள் வேண்டும் கோவிலின் சொத்துகள் வேண்டும் ஆனால் கோவிலுக்கு பாதுகாப்பு வேண்டாமா? இது என்ன நியாயம் என்று பொதுமக்கள் கொந்தளிப்பு அடைந்தனர்.

மேலும் இந்த கடத்தலுக்கு சம்பந்தப்பட்டவரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884