Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

"காவிரிக்கரையில் ஒரு கலந்துரையாடல்" என்னும் தலைப்பில் ஒன்று கூடல்.

Top Post Ad

வன உயிரின வார விழாவையொட்டி தகடூர் இயற்கை அறக்கட்டளை முன்னெடுத்த "காவிரிக்கரையில் ஒரு கலந்துரையாடல்" என்னும் தலைப்பில் ஒன்று கூடல் இன்று  (10.10.2021 ) நடந்தது. யானை ஆய்வாளர் ஆற்றல் பிரவின்குமார் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சூழல் செயல்பாட்டாளர் திரு கோவை சதாசிவம் கலந்து கொண்டார்.  மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இரா. செந்தில், இதயவியல் மருத்துவர் சிவ சுப்ரமணியம் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தருமபுரி மாவட்டதில் உள்ள காடுகள் அதில் உள்ள பல்லுயிர்ச் சூழல், கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும் அதனை கடந்து போகும் காவிரி ஆறும் என பல தலைப்புகளில் கலந்துரையாடல் நடந்தது. காவிரியில் திடக் கழிவுகள் மட்டுமில்லாமல் இரசாயன கழிவுகள் கலப்பதை தடுக்க கோரிக்கையாக அரசுக்கு வைக்க தீர்மானிக்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்வை தொடர் செயல்பாடாக எடுத்துக் செல்வது பற்றியும் அடுத்த தலைமுறைக்கு இந்த செயல்பாடுகளை கடத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கூத்தப்பாடி பழனி தலைமை ஆசிரியர் ஒருங்கினைத்தார்.

இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட பொது மக்களும் பள்ளி மாணவர்களும் காவிரிக் கரையில் அமர்ந்து தங்களது பங்களிப்பையும் வழங்கினர்.  முடிவில் கென்னடி எதிர்கால திட்டம் பற்றியும் நன்றியும் கூறினார்.

Below Post Ad

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Hollywood Movies