இதில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நூலஹள்ளி கிராமத்தில் சட்ட விரோதமாக அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, அதில் அதிக நெடியுடன் கூடிய திரவப் பொருளை கலந்து, மனித உடலுக்கு கேடு விளைவிக்கின்ற வகையிலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த நரசிம்மன், வடிவேல் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடமிருந்து தலா 52 மதுபாட்டில்கள் என 104 மதுபாட்டில்களை அதியமான்கோட்டை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஏ.பள்ளிப்பட்டி கிராமத்தில் அரசு மதுபாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த அன்பழகன் என்பவரை ஏ.பள்ளிப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்து 401 அரசு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் காரிமங்கலம் பகுதியில் சந்தோஷ், பச்சையப்பன் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 150 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து தலைமறைவானார்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் சந்து கடை மது விற்பனை செய்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் ராஜ்குமார்.