Type Here to Get Search Results !

மலை போல் குவிந்து இருக்கும் குப்பைகள்.! துர்நாற்றம், சுகாதார சீர்கேடு, நோய் பரவும் அபாயம்.!!

ஏரியூரில் மலை போல் குவிந்து இருக்கும் குப்பைகள்.! துர்நாற்றம், சுகாதார சீர்கேடு, நோய் பரவும் அபாயம்.!!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்  வட்டத்தில் அமைந்துள்ளது ஏரியூர் பகுதி. இதற்கு முன்பு பெண்ணாகரம் ஊராட்சி ஒன்றியம் ஆக இருந்த இப்பகுதி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏரியூர் தனி ஒன்றியமாக அறிவிக்கப்பட்டு பிரிக்கப்பட்டது.

 தற்பொழுது இப் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது,புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது மற்றும்  தற்போது சட்டசபையில் இப்பகுதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு என இப் பகுதிக்கான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 ஏரியூரை சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் தங்களது அன்றாட தேவைகளுக்காகவும்,  தங்களின் விளை  பொருட்களை சந்தைப்படுத்தவும் ஏரியூர்க்கு  தினசரி வந்து செல்கின்றனர்.
பேருந்து நிலையம், கடைவீதி, வங்கிகள் அமைந்துள்ள இப்பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளன.

 தற்பொழுது தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் தேங்கிய குப்பை கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது, இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலருக்கும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

ஏரியூர் ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக வளர்ந்துவரும் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், உடனடியாக ஏரியூர்  ஊராட்சி மன்ற நிர்வாகம் தினசரி குப்பைகளை அகற்றி தூய்மை பணிகளை சரியாக மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884