Type Here to Get Search Results !

12ஆம் தேதி காலை மாலை இருவேளையும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,129.2021
அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும்
முகாம் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறவுள்ளது என மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,12.9.2021 அன்று
மாநில தழுவிய மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனடிப்படையில்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், இரண்டாவது
தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் கொரோனா தடுப்பூசி முகாம் காலை
ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள
வார்டு பகுதிகளிலும், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம்,
அரசு மருத்துவமனைகளில் என 800 -க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்படவுள்ளது.
இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்த
முகாம்களில் அரசு மருத்துவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை செவிலியர்கள்,
சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள்,
ஆசிரியர்களும் ஈடுபடுத்த உள்ளார்கள். இதில் 18 வயத்திற்கு மேற்பட்ட அனைவரும்
பயனடைய உள்ளார்கள். 

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்களும் மற்றும்
கல்வித்துறை பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
மேலும், முதல் தவணை தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக்கொண்டவர்கள் 84 நாட்கள்
கழித்தும், கோவேக்சின் செலுத்திக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து இரண்டாவது தவணை
தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டியவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை முழுமையாக
பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி
இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884