அயல்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 8 செப்டம்பர், 2021

அயல்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு.

அயல்நாட்டுப்பணி தேடும் இளைஞர்கள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
(OVERSEAS MANPOWER CORPORATION LIMITED ) நிறுவனத்தின்
www.ormcmanpower.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி அயல்நாட்டு
வேலைவாய்ப்புகள் மற்றும் அதைப்பற்றிய விவரங்கள் அறிந்துகொள்ளலாம். தருமபுரி
மாவட்டத்தைச் சேர்ந்த படித்த அயல்நாட்டுப்பணி தேடும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை
பயன்படுத்தி அயல்பணி பெற்று பயன்பெறுலாம் -
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தகவல்
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள்
தெரிவித்துள்ளதாவது.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என்பது தமிழக அரசு சார்ந்த நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 40 வருடங்களாக வெளிநாடுகளுக்கு மனிதவளம்
வழங்கும் அரசு நிறுவனமாக நம்பகத்தன்மை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, கனடா,
சிங்கப்பூர், மலேசியா, பக்ரைன், லிபியா, குவைத், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு
எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளில் 10350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,
செவிலியர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவத்துறைச்சார்ந்த
தொழில்நுட்ப வல்லுநர்கள், திறனுடைய மற்றும் திறனற்ற பணியாளர்கள் இந்நிறுவனம்
மூலம் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முக்கிய நோக்கம் அயல்நாட்டில்
பணிபுரிய விரும்பும் வேலைநாடுநர்களை அங்கீகாரமற்ற மற்றும் நேர்மையற்ற
நிறுவனங்களின் சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுதல்,
உலகத்தரத்திற்கு நிகராக திறன்களை உடைய இளைஞர்களை உருவாக்குதல்,
அயல்நாட்டில் பணிபுரிய விரும்பும் வேலைநாடுநர்களின் திறன்களை மேம்படுத்துதல்
இங்கிலாந்து நாட்டில் பணிபுரிய ஆங்கிலத்தில் பேசும், எழுதும், படிக்கும், மற்றும்
கேட்கும் திறன்களை மேம்படுத்துதல். தமிழ்நாட்டிலிருந்து திறனுள்ள மனிதவளத்தை
அதிகரித்தல். அனுபவமுள்ள வேலைநாடுநர்களுக்கு அயல்பணி பெற உதவி புரிதல்.
வேலைநாடுநர்களுக்கு அயல் பணிச்சூழல் மற்றும் பணித்தன்மைக்குறித்து விரிவாக
விவரித்தல்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 1985 ஆம் ஆண்டு முதல் சவூதி
அரேபியா நாட்டில் பணிபுரிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த
கல்வித்தகுதிகளையுடைய பணியாளர்களை பணியமர்த்தம் செய்துக்கொண்டிருக்கிறது.
அயல்பணி வழங்கும் நிறுவனங்கள் தங்கள் நாட்டின் மொழி மற்றும் மேம்படுத்தப்பட்ட
திறன் உள்ள வேலைநாடுநர்களையே தேர்வு செய்கிறார்கள். எனவே, அயல்நாட்டு
வேலைவாய்ப்பு நிறுவனம் ஒவ்வொரு வருடமும் 500 செவிலியர்களுக்கு (OET)
Occupational English Test நடத்த தீர்மானித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட
செவிலியர்களுக்கு ஆரம்ப நிலை சம்பளமே வருடத்திற்கு தோராயமாக ரு 18 லட்சம்
ஆகும்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அயல்பணி தேடும் வேலைநாடுநர்களுக்கு
வாய்ப்புகளை அதிகப்படுத்தும் நோக்கில் செவிலியர்களை தேர்வு செய்யும் M/s. Health
Education England என்ற இங்கிலாந்து நிறுவனத்துடன், வீட்டுப்பணியாளர்களை தேர்வு
செய்யும் M/s. Al Durra Manpower குவைத் நாட்டுடன், மற்றும் M/s. India Trade and
Exhibition Centre என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
www.omcmanpower.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி
அயல்நாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் அதைப்பற்றிய விவரங்கள் அறிந்துகொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம், தருமபுரி அலுவலகத்தை அனுகவும்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த படித்த அயல்நாட்டுப்பணி தேடும் இளைஞர்கள்
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அயல்பணி பெற்று பயன்பெறுமாறு மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி. ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

Post Top Ad