இளம்பெண் கடத்தல்:
வாலிபர் போக்சோவில் கைது.
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே கோட்டப்பட்டி வேலனூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த 2020 நவம்பர் 27 தேதி பொரிசுமரத்துவளவு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் அயப்பன் (வயது 27) என்பவர் கடத்திச் சென்றார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் மாணவி வீடு திரும்பி பெற்றோருடன் இருந்து வந்தார்.
மாணவியை கடத்திய அயப்பன் ஓராண்டாக தலைமறைவாக இருந்தார். நேற்று முன்தினம் கோட்டப்பட்டி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஐயப்பன் சொந்த கிராமத்திற்கு வந்து இருந்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக