Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பது குறித்த ஒத்திகை.

தருமபுரி மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினருக்கு ஒகேனக்கல் பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் பேரிடர் மீட்பு குழுவிற்க்கு 60 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்காக பேரிடர் காலங்களில் சிக்கிக்கொள்ளும் பொது மக்களை மீட்பது உயிர்ச் சேதங்கள் மற்றும் பொருட்சேதம் வெள்ள அபாய காலங்களிலும் தடுப்பது உள்ளிட்ட ஒத்திகை மேற்கொள்ள ஒகேனக்கல் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒகேனக்கல் பகுதியில் காவிரி ஆற்றிற்க்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆற்றின் ஆழம் தெரியாமலும் சுழலில் சிக்கியும் பலரும் உயிரிழக்க நேரிடுகிறது. இதுபோன்ற சமயங்களில் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் மாவட்டங்களில் இருந்து இப்பகுதியில் வருவதற்குள் பாதிக்கப்படும் நபர் உயிரிழக்க நேரிடுகிறது.  இது போன்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டும் மேலும் அந்தந்த மாவட்டங்களிலேயே பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைத்துக் கொள்வதற்காக இன்று பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள காவலர்களுக்கு நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது ஆற்று நீரின் சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்பது குறித்தும் நீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி செய்து காப்பாற்றும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் ஆற்றில் அதிகளவு நீர் வரும்போது சாதாரண படகுகளை இயக்கும் முறை மற்றும் விசைப்படகுகள் உள்ளிட்டவற்றை இயக்கி பேரிடர்களில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஒத்திகை நடைபெற்றது. இந்த பயிற்சியில் தருமபுரி மாவட்ட காவல் துறையிலிருந்து பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884