கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை தடுப்பூசி சிறப்பு முகாம் கண்காணிப்பு அலுவலருமான திரு. எஸ். பழனிசாமி, இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை தடுப்பூசி சிறப்பு முகாம் கண்காணிப்பு அலுவலருமான திரு. எஸ். பழனிசாமி, இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று (12.09.21) நடைபெறும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அரசு இணைச் செயலாளரும், தடுப்பூசி சிறப்பு முகாம் கண்காணிப்பு அலுவலருமான திரு. எஸ். பழனிசாமி, இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 872 இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அரசு இணைச் செயலாளரும், தடுப்பூசி சிறப்பு முகாம் கண்காணிப்பு அலுவலருமான திரு.எஸ்.பழனிசாமி, இஆப., அவர்கள் இன்று (12.09.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அரசு இணைச் செயலாளரும், தடுப்பூசி சிறப்பு முகாம் கண்காணிப்பு அலுவலருமான திரு.எஸ்.பழனிசாமி,இஆப., அவர்கள் பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 872 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பிற துறை பணியாளர்கள் என மொத்தம் 3900 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்கள், குக்கிராமங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று தருமபுரி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் உள்ள பகுதிகளில் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு, தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அரசு இணைச் செயலாளரும், தடுப்பூசி சிறப்பு முகாம் கண்காணிப்பு அலுவலருமான திரு.எஸ். பழனிசாமி, இஆப., அவர்கள் பேசினார்.

இந்த ஆய்வின் போது சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு. சவுண்டம்மாள், வட்டாட்சியர்கள் திரு.ராஜராஜன், திரு.அசோக்குமார், வட்டார மருத்துவ அலுவலர்கள் மரு.சரஸ்குமார், மரு.சிவகுரு, பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.டார்த்தி ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad