100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்க கோரி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி பஞ்சாயத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மூன்று இடங்களில் வேலைகள் நடைபெற்று வருகிறது.
இதை கண்டித்தும், முறையாக அனைவருக்கும் வேலை வழஙக் கோரியும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று. முற்றுகையிட்டனர். இதையடுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது மக்களிடம் பேசிய அவர், அதிகாரிகளிடம் பேசி அனைவருக்கும் உரிய முறையில் வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக