Type Here to Get Search Results !

வீச்சருவா உடன் காரில் கஞ்சா கடத்திய 2 நபர் கைது.

அரூர் அருகே வீச்சருவா உடன் காரில் கஞ்சா கடத்திய 2 நபர் கைது.

தர்மபுரி மாவட்டம் அரூர்- மொரப்பூர் சாலையில்  நேற்று முன்தினம்  போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது  எட்டிப்பட்டி அருகே மரத்தின் கீழ் கர்நாடகா நம்பர் பிளேட் பொருத்திய சிகப்பு நிற ஸ்கார்பியோ காரை நிறுத்தி ஆறு நபர்கள் வீச்சருவா  காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். போலீஸ் வாகனத்தை கண்டதும் தப்பியோட முயன்றனர். இருவரை விரட்டி பிடித்த போலீசார்  காரை  சோதனை செய்ததில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, ஆறு வீச்சருவா வைத்திருந்தது தெரியவந்தது.

பிடிபட்ட இருவரை  போலீசார் விசாரித்ததில் பெங்களூரை சேர்ந்த  அன்சர்பாஷா மகன் நயீன்பாஷா(25)கூடுபாஷா மகன் இம்ரான்கான்(24) என தெரிந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் சையத்நாவஸ், சையத்அயாஸ்,  அப்சல்பாஷா,நவாஸ்பாஷா என்பது தெரியவந்தது. கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, 6 வீச்சருவாவை போலீஸார் பறிமுதல் செய்தனர் கைது செய்த இருவரை  நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில்  அடைத்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884