போஸ்மாட்டம் செய்ய காலதாமதம் அரூரில் சாலை மறியல். போலீசாருடன் வாக்குவாதம்.
அரூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆத்தோர தெருவைச் சேர்ந்த சேரன் மகன் ரீகன் ஆட்டோ டிரைவர் நேற்றிரவு இவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் அரூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இன்று உடலை போஸ்மார்ட்டம் செய்ய காலதாமதம் ஏற்பட்டது மேலும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆத்திரமடைந்த ரீகன் உறவினர்கள் மருத்துவமனை எதிரில் அரூர்- தர்மபுரி போக்குவரத்து சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பிறகு போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக