இன்று கார்கில் வெற்றித் திருநாளில் ஒசஹள்ளிபுதூர் ஊ. ஒ. ந.நிலைப்பள்ளியில் கார்கில் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தேச பணியாற்றிய இராணுவ வீரர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தேசபணியாற்றிக்கொண்டிருக்கும் ஸ்ரீ M.ரமேஷ். அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சிலம்பரசன், சங்கீதா, தென்றல் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.பள்ளித்தலைமையாசிரியர் ஸ்ரீ கற்பகம் அவர்கள் இராணுவ வீரருக்கு மரியாதை செய்து வாழ்த்துக்கள் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் முருகன் ஆசிரியர் அவர்கள் இராணுவ வீரரை அறிமுகம் செய்து கார்கில் வெற்றி பற்றிய சில கருத்துக்களை தெரிவித்தார். தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாகவும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக