மாநில அளவிலான ஒலிம்பியட் யோகா போட்டிக்கு அரூர் பள்ளி மாணவன் தேர்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டு.
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் ஒலிபியட் யோகா போட்டி சிறப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் முதலிடத்தைப் பிடித்து மாநில ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற்றான். தேர்வு பெற்ற எஸ் பாரத் என்ற மாணவனையும் பயிற்சி அளித்த யோகா மாஸ்டர் பழனிதுரை. சங்கர் முருகேசன் ஆகியோரை பாராட்டி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அம்மா திருமதி கீதா அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் திரு பொன்முடி, அவர்கள். பால சுப்பிரமணியம் அவர்கள், RMSA ஒருங் கிணைப்பாளர் தங்கவேல், சீனிவாசன்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் . ஆறுமுகம் ஆகி யோர் வெற்றி பெற்ற மாணவனுக்கு நினைவுப்பரிசு TAB, யோகா மேட், யோகா புத்தகம், நினைவு கோப்பை, சீருடை ,மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி மாநில போட்டியில் வெற்றி பெற வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக