110 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 880 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.28.25 இலட்சம் மதிப்பில் நிதி உதவி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 ஜூலை, 2021

110 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 880 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.28.25 இலட்சம் மதிப்பில் நிதி உதவி.


தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 110 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 880 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.28.25 இலட்சம் மதிப்பில் நிதி உதவியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 110 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 880 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.28.25 இலட்சம் மதிப்பில் நிதி உதவியையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். இவ்விழாவிற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. டி.என்.வி.எஸ். செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர் இவ்விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: பெண்கள் வளர்ச்சியில் தருமபுரி மாவட்டம் முன்னோடி மாவட்டமாக விளங்கிவருகிறது. அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கின்றனர் இதன் மூலம் நகரங்களுக்கு சென்று அரசின் திட்டங்களை பெண்களே வந்து அழிந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ் நாட்டில் பெண்களின் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பெண் விடுதலைக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் வழிவகுத்து வருகிறது. பெண்கள் தொடர்ந்து உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் திருமண நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 


தருமபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு குழந்தை திருமணங்கள் அறியப்பட்டுள்ளது இதற்கு காரணமான அவர்களின் பெற்றோர்கள் மீதும் கணவன் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் குழந்தை திருமணங்கள் நடைபெறுவது அறிந்தால் உடனடியாக 1098 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளிக்கவேண்டும் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். குழந்தை திருமணங்களை தடுப்பதில் பொது மக்களின் பங்கு உள்ளது. சட்டப்படி பெண்களுக்கு 18 வயதுக்கு மேல் திருமணம் செய்ய வேண்டும் என்று இருந்தாலும் அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியை கருத்தில் கொண்டு இருபத்தொரு வயது குறையாமல் பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்று பெற்றோர் உறுதியுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் செயல்படுத்தும் மக்கள் நலத்திட்டங்களை மற்ற மாநிலங்கள் செயல்படுத்தும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை பெண்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல்வேறு சூழல் நிதி மற்றும் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது இதைப் பயன்படுத்திக்கொண்டு சுய உதவிக் குழுவினர் அப்பகுதிகளுக்கு ஏற்றவாறு சுய தொழில்களை தொடங்கி முன்னேற வேண்டும்.இந்த விழாவில் 107 பட்டதாரி அல்லோதர், 3 பட்டதாரி பயனாளிகள் என 110 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 880 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.28.25 இலட்சம் மதிப்பிலான நிதியுதவிகள் வழங்கப்படுகிறது. 

நலத்திட்ட உதவிகளை பெற்ற அனைத்து பயனாளிகளும் இதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசினார். இவ்விழாவில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.நாகலட்சுமி, தருமபுரி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் திரு.டி.ஆர்.அன்பழகன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி.கவிதா இராமகிருஷ்ணன் (பென்னாகரம்), திரு.பழனிசாமி(ஏரியூர்), மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.மௌனிகா தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வடிவேலன், திரு.ஜெகதீசன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad