Type Here to Get Search Results !

கிணறில் தவறி விழுந்து ஓட்டுநர் பலி.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் நடூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பெருமாள் (வயது 37). லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.


இவர் நேற்று முன்தினம் முதல் வீட்டை விட்டு வெளயே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் ஆலாபுரம் நடூர் பகுதியில் உள்ள ஆனந்தன் என்பவரது விவசாய கிணற்றில் ஓர் ஆண் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்கு பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தது லாரி டிரைவர் பெருமாள் என தெரிய வந்தது. சம்பவத்தன்று மதுபோதையில் பெருமாள், கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகின்றனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies