Type Here to Get Search Results !

தருமபுரி வத்தல்மலையில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தருமபுரி ஜூன் 13,
தருமபுரி மாவட்டம் வத்தல் மலை சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்தப்பட உள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தோட்டக்கலைத்துறை சார்பில் தாவரவியல் பூங்கா அமைய உள்ளது.இந்த பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் குமரேசன், ஒன்றிய பொறியாளர் அன்பழகன், ஒப்பந்ததாரர் ஜெமினி & கோ ஜெயப்பிரகாஷ், தோட்டக்கலைத் துறை இயக்குனர், மற்றும் வட்பாட்சியர்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies